சக பெண் கைதியை தாக்கிய திருநங்கைகள் மீது வழக்கு பதிவு

1885பார்த்தது
சென்னை புழல் பெண்கள் சிறையில் திருநங்கைகள் வியாசர்பாடி ஷீபா (21) எருக்கஞ்சேரி அகல்யா(25) ஆகியோர் கொடுங்கையூர் பகுதியில் கள்ள மதுபானம் விற்றதாக கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அதே சிறையில் இருக்கும் சிறைவாசி வண்ணாரப்பேட்டை லட்சுமி (50) என்பவருக்கும், இரண்டு திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எங்கள் பிறப்பை பற்றி தவறாக பேசினாயா? என வாக்குவாதம் செய்தபடியே ஆபாச வார்த்தைகளால் திட்டி திருநங்கைகள் தாக்கியதில் லட்சுமிக்கு கழுத்து, முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக புழல் பெண்கள் சிறை உதவி சிறை அலுவலர் அனுராதா புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் திருநங்கைகள் மீது 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி