எனது இறுதிச் சடங்கிற்காவது வாருங்கள் - கார்கே உருக்கம்

83பார்த்தது
எனது இறுதிச் சடங்கிற்காவது வாருங்கள் - கார்கே உருக்கம்
கர்நாடக மாநிலத்தின் தனது சொந்த மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உருக்கமாக பேசியுள்ளார். அங்கு அவர் பேசுகையில், எனக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காது போகலாம். ஆனால் என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வருவீர்கள் என நம்புகிறேன். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று உருக்கமாக பேசினார்.

தொடர்புடைய செய்தி