மர்ம காய்ச்சலுக்கு 7வயது சிறுவன் உயிரிழப்பு

1904பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பெரியார் நகரை சேர்ந்த சங்கர் - கோவிந்தம்மாள் தம்பதியர் அங்குள்ள அரசி ஆலையில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது 7 வயது மகன் சிவா கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த்ள்ளார். அபெபோது அருகில் உள்ள மருந்துகடையில் காய்ச்சல் மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். நேற்று மீண்டும் காய்ச்சல் அதிகமாகி சிறுவன் சோர்வடைந்து மயங்கியுள்ளார்.

உடனடியாக சிறுவனை பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த செங்குன்றம் போலீசார் சிறுவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி