தமிழகத்தில் ஏப்ரல் 28 வரை மழை - வானிலை மையம்

52பார்த்தது
தமிழகத்தில் ஏப்ரல் 28 வரை மழை - வானிலை மையம்
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 25) கடுமையான வெயில் அனைவரையும் வாட்டி எடுத்து.இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று தொடங்கி ஏப்.28ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி