2 நாட்கள் மெட்ரோ குடிநீர் விநியோகம் நிறுத்தம்

1065பார்த்தது
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிண்டி - பூந்தமல்லி சாலையின் போரூர் சந்திப்பில் பிரதான குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று இரவு 9 மணி முதல் 27ஆம் தேதி இரவு 9 மணி வரை 2 நாட்களுக்கு அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு, பாடி, பார்க் ரோடு, டி. எஸ். கிருஷ்ணா நகர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு பகுதிகள், அண்ணா நகர் மண்டலத்தில் அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு பகுதிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர் பகுதிகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி பகுதிகள், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலத்தில் அனைத்து பகுதிகள், அடையார் மண்டலத்தில் ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி