திருமண விழாவில் பயங்கர தீவிபத்து - 6 பேர் பலி (வீடியோ)

27185பார்த்தது
பீகார் மாநிலம் தர்பங்காவில் திருமண விழாவில் நேற்று (ஏப்ரல் 25) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருமண விழாவின் போது பட்டாசு வெடித்ததில் தீ மளமளவென பரவியது. இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சுனில் (26), லீலாதேவி (23), தேவி (26), சித்தாந்த் (4), ஷஷாங்க் குமார் (3), குமாரி (5) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் 3 பசுக்களும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.