பெங்களூரு தெற்கு பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது கர்நாடக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மத ரீதியாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு வாக்கு சேகரித்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மத ரீதியாக பதிவிட்ட பதிவில், 500 ஆண்டு கால காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்டதாக ராமர் கோயிலை சுட்டிக்காட்டி, இதனால் கோடிக்கணக்கான இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளதால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என பதிவிட்டு இருந்தார்.