மாற்றுத்திறனாளி பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

76பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே சாலை
விபத்தில் மூளை சாவு அடைந்த மாற்றுத்திறனாளி பெண் அரசம்மாள் (59) என்பவரது உடல் உறுப்புகள் உறவினர்கள் சம்மதத்துடன் இன்று (ஜூன் 14) தானம் செய்யப்பட்டது. தமிழகத்திலேயே முதன் முறையாக உடல் உறுப்பு தானம் செய்யும் மாற்றுதிறனாளி பெண் அரசம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது. தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நெல்லை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி