நெல்லையில் கொட்டப்பட்ட கேரளா கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கு எடுத்து செல்லும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கொட்டப்பட்ட கேரளா மருத்துவக் கழிவுகளை கேரளாவே திருப்பி எடுத்து செல்லும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு திருநெல்வேலியில் தான் நடைபெற்று உள்ளது. இதற்கு நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், எஸ்பி சிலம்பரசனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.