டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை வேறு உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் 46-வது வழக்காக இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.