மதுரையில் மேலூர் அருகே மேலவலவு எனுமிடத்தில் உள்ள சோமகிரி மலைகளில் இராஜராஜ சோழனைப் பற்றிய ஒரு புதிய கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு ஆனது, கி.பி. 1,000 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் கல்வெட்டு ஆனது பாண்டிய நாடு என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் காணப் படும் ஒரு தனித்துவமான வணக்கவுரையாக இராஜ ராஜ மும்முடிச் சோழர் என்ற மரியாதைக்குரிய பட்டத்துடன் தொடங்குகிறது.