நெல்லை டவுண் புகழ்பெற்ற நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா வரும் 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிலையில் திருவிழா அழைப்பிதழை அறங்காவலர் குழு தலைவர் செல்லையா இன்று மாநகர திமுக அலுவலகத்தில் வைத்து மாநகர செயலாளர் சுப்ரமணியனிடம் வழங்கினார். நெல்லை பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி உள்பட பலர் இருந்தனர்.