நேருக்கு நேர் மோதிய பிக்கப் வேன்கள்.. 2 பேர் பலி

60பார்த்தது
நேருக்கு நேர் மோதிய பிக்கப் வேன்கள்.. 2 பேர் பலி
சேலம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர் நேற்றிரவு (செப்.28) பேளுக்குறிச்சியில் சந்தையை முடித்துவிட்டு பிக்கப் வேனில் ராசிபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டியதாகத் தெரிகிறது. அப்போது எதிரே வந்த மற்றொரு பிக்கப் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி