நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று வழக்கம்போல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. அந்த வகையில் மேலப்பாளையம் பகுதியிலும் காலை முதல் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பிற்பகல் 4. 30 மணியளவில் திடீரென மேலப்பாளையத்தில் கனமழை செய்ய தொடங்கியது. குறிப்பாக இடி மின்னலுடன் அங்கு கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.