திருநெல்வேலி; எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயலக கூட்டம்

69பார்த்தது
திருநெல்வேலி; எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயலக கூட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயலக கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயலக கூட்டம் மாவட்டத் தலைவர் எம்.கே பீர்மஸ்தான் தலைமையில் மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.
மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் எம்.எஸ்.சிராஜ் வரவேற்ற பேசினார். துணை தலைவர் முல்லை மஜீத், மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புறநகர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கிளை, மற்றும் , நகரம்,தொகுதி தேர்தல்களில் மீதமுள்ள பகுதிகளுக்கு கூடிய விரைவில் தேர்தல் நடத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
தேசியத்திற்கு கொடுக்க வேண்டிய சந்தாவை மிதமுள்ள கிளைகளில் உடனடியாக வசூல் செய்து மாநில தலைமைக்கு ஒப்படைக்க வேண்டும். 5-09-2024 அன்று மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி