முற்றுகையிட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்

572பார்த்தது
திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு, ஒப்பந்த நிறுவனம் இதுவரை சம்பளம் வழங்காததால் பணியாளர்கள் பெருமாள்புரத்தில் உள்ள சுகாதார அலுவலகம் முன்பு இன்று (ஆகஸ்ட். 09) காலை திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அவர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். சமாதானம் அடைந்த தொழிலாளர்கள் களைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி