சப்பர பவனியில் பக்தர்கள் திடீர் போராட்டம்

78பார்த்தது
நெல்லையில் தசரா திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவிலில் இருந்து சப்பரங்கள் பவனி செல்லும். நேற்று இரவு தசரா திருவிழா முன்னிட்டு சப்பரங்கள் பவனி சென்ற நிலையில் மேளதாளங்களுடன் பக்தர்கள் ஆட்டம் போட காவல்துறை அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. போலீஸை கண்டித்து பக்தர்கள் சப்பரத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாமதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு சப்பரங்கள் பவனி சென்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி