ஸ்ப்ளெண்டர் பைக்குகளை மட்டும் திருடும் திருடர்கள்

58பார்த்தது
ஸ்ப்ளெண்டர் பைக்குகளை மட்டும் திருடும் திருடர்கள்
மதுரையில், கோயில் திருவிழாகள், புதிய படங்கள் ரீலீஸ் ஆகும் திரையரங்குகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ப்ளெண்டர் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 21 பைக்குகளை பறிமுதல் செய்தனர். திருடிய பைக்குகளை பார்ட், பார்டாக பிரித்து, உதிரி பாகங்களை ஞாயிற்றுகிழமை சந்தையில் இருவரும் விற்றது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி