தெருவோரத்தில் வளர்ந்து நின்ற கஞ்சா செடி

57பார்த்தது
தெருவோரத்தில் வளர்ந்து நின்ற கஞ்சா செடி
திருப்பூர் மாநகராட்சி 23வது வார்டு காந்திநகர் அன்னை கார்டன் பின்புறம் குடியிருப்பு பகுதியில், சாலையோரம் வளர்ந்திருந்த 4 அடி உயர கஞ்சா செடியை கண்ட பொதுமக்கள், வேலம்பாளையம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், குறிப்பிட்ட செடியை சோதனையிட்டனர். அது கஞ்சா செடி என உறுதியானதையடுத்து போலீசார் அதை அப்புறப்படுத்தினர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி