இந்திய அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள்.. ரோகித் சர்மா

55பார்த்தது
இந்திய அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள்.. ரோகித் சர்மா
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா "இந்த டெஸ்ட் போட்டி குறித்து நான் அதிகம் கவலைப்பட போவதில்லை. முதல் இன்னிங்ஸில் அந்த 3 மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து இந்திய அணி எப்படிப்பட்ட அணி எனக் கூறுவது நியாயமாக இருக்காது. இந்த தோல்வியோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. இது குறித்து அதிகம் சிந்திக்காமல் இருக்க நாங்கள் முயற்சிப்போம். இரண்டாவது போட்டியில் எப்படி வலுவாக மீண்டு வருவது என்பதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி