'தேவர்' சமுதாய வழக்கு தள்ளுபடி

537பார்த்தது
'தேவர்' சமுதாய வழக்கு தள்ளுபடி
'தேவர்' சமுதாய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை தேவர் சமுதாயம் என்று அறிவிக்கக்கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பல பிரிவுகளாக இருக்கின்றனர். எனவே தமிழ்நாடு அரசின் அரசாணையை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தனிப்பட்ட நபரின் விருப்பத்திற்காக தமிழக அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

தொடர்புடைய செய்தி