டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை.. அண்ணாமலை ஓபன் டாக்

57பார்த்தது
டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் சொன்னது உண்மைதான். அவர் பேசியதை ட்ரோல் செய்தாலும் அவர்களின் ஆட்சியில் நடந்த தவறை அவரே ஒப்புக்கொண்டுள்ளார் என கூறியுள்ளார். மேலும், நான் கள்ளக்குறிச்சி சென்றபோது டாஸ்மாக் மதுவின் தரம் தண்ணீரைப் போன்று இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். மதுவுக்கு அடிமையானவர்கள் தங்களுக்கு அந்த கிக் கிடைக்கவில்லை என்பதற்காக கஞ்சாவை நோக்கி செல்கிறார்கள். இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு” என்று தெரிவித்தார்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி