கம்பம் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது

75பார்த்தது
கம்பம் நகர் மன்ற கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது, கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் வனிதாநெப்போலியன் தலைமை தாங்கி தீண்டாமை உறுதிமொழி வாசித்தார்.

அதன் பின்பு வயநாடு பேரிடரில் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 11ஆவது வார்டு உறுப்பினர் கம்பம் சாதிக் பேசுகையில், ' கம்பம் முகையதீன் ஆண்டவர் புரம் பள்ளிக்கூடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். கம்பத்திற்கு என தனி சர்வேயர் நியமனம் செய்ய வேண்டும். மேலும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் விட வேண்டும் என்றார். கேள்விகளுக்கு பதிலளித்த நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கவுன்சிலரின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்றார்

தொடர்புடைய செய்தி