கலைஞர் நினைவு தினம் திமுகவினர் மரியாதை

67பார்த்தது
தேனி மாவட்டம் போடி திமுக நகர் அலுவலகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நகரச் செயலாளர் புருசோத்தமன் தலைமையில் திமுகவினர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். மேலும் நகர் தேவர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருஉருவ படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் ராஜரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், பஷீர் முகமது, பரணி, நகர துணை செயலாளர்கள் வெங்கடேஷ் குமார், காளிதாஸ் தேனி வடக்கு மாவட்ட விவசாய தொண்டர் அணி அமைப்பாளர்செல்வகுமார் , மற்றும் திமுகவின் நகர் கழக நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி