வீட்டின் மேல் சுவர் இடிந்து ஒருவர் படுகாயம்

78பார்த்தது
வீட்டின் மேல் சுவர் இடிந்து ஒருவர் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. அங்கு, வீட்டின் மேல் சுவர் கட்டிலில் படுத்து இருந்த இளைஞர் மீது இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இளைஞர் படுகாயமடைந்தார். தொடர்ந்து, அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு இடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். மேலும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி