பக்ரீத் வாழ்த்து கூறிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

81பார்த்தது
பக்ரீத் வாழ்த்து கூறிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “உலகில் அன்பும் அமைதியும் தழைத்திட அனைவரும் மனிதநேயம் மற்றும் சகோதரத்துவச் சிந்தனையோடு வாழ வேண்டும் என்று கூறி அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, இசுலாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்” என்றார்.