கூட்டத்தில் புகுந்த டிராக்டர்.. தெறித்து ஓடிய மக்கள்

6426பார்த்தது
பஞ்சாப் மாநிலம் பக்வாரா மலைத்தொடரில் உள்ள டோமேலி கிராமத்தில் கடந்த 15ஆம் தேதி டிராக்டர் பந்தயம் நடத்தப்பட்டது. இதனை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். போட்டியின் நடுவில் டிராக்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பலர் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பந்தையத்திற்கு பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும், டிராக்டர் பந்தயத்துக்கு ஏற்பாடு செய்த 4 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி