மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திறக்க ஓடிபி எதுவும் தேவையில்லை. மும்பை வடமேற்கு தொகுதியில் முகவர் விதிகளை மீறி செல்போன் பயன்படுத்திய விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வயர்லெஸ் தகவல் தொடர்பு திறன் இல்லை. ப்ரோக்ராமிங் செய்ய முடியாது என்பதால் அதனை திறப்பதற்கு ஓடிபி எதுவும் தேவையில்லை என தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
குறிப்பிட்ட நிறுவனத்தால் பரப்பப்பட்ட முற்றிலும் பொய் செய்தி என தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி விளக்கம் அளித்துள்ளார்.