''பக்ரீத் சக மனிதனை நேசிக்க சொல்கிறது" - வைரமுத்து

62பார்த்தது
''பக்ரீத் சக மனிதனை நேசிக்க சொல்கிறது" - வைரமுத்து
இஸ்லாமியர்களின் தியாகப் பெருநாளான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ‘X’ தளத்தில் பக்ரீத் வாழ்த்து கூறியுள்ளார். அதில், “குடும்பம், நிறுவனம், அரசு என்ற அமைப்பு யாரோ ஒருவரின் தியாகத்தை வைத்து கட்டமைக்கப்படுகிறது. அத்தியாகத்தை கொண்டாட்ட குறியீடாகக் கொள்ளும் பக்ரீத் சக மனிதனை நேசிக்க சொல்கிறது. குறிக்கோள் மிக்க கொண்டாட்டத்தை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தருவோர் பெறுவோர் இருவரும் வாழ்க” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி