நான் முதல்வன் திட்டம் - சென்னை திரும்பிய மாணவர்கள்

51பார்த்தது
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சிக்காக லண்டன் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு, கடந்த 9 ஆம் தேதி அதிகாலை 2 பேராசிரியர்களுடன் 25 மாணவர்கள் லண்டன் அழைத்து செல்லப்பட்டனர். தற்போது பயிற்சி முடிந்து இன்று சென்னை திரும்பினர். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், “எங்ககிட்ட பெர்பார்மன்ஸ்-அ பாத்து லண்டன்லயே ஆச்சர்யப்பட்டாங்க. தமிழ்நாட்டு மாணவர்கள் கிட்ட இருந்து அவங்க இதை எதிர்பாக்கவில்லை” என நெகிழ்ச்சியாகப் பேசினார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி