மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள மஹுல்ஜீர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட போடல் கச்சார் கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மஹுல்ஜீர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை கோடாரியால் வெட்டிக் கொன்றார். பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது.
இறந்தவர்களில் தினேஷின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர். தினேஷுக்கு மனநிலை பாதித்ததால்தான் இந்த கொடூரத்தை அரங்கேற்றியதாக ஊர்மக்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.