திருமணம் என்பது அனைவரது வாழ்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. குடும்பத்தில் பெற்றோர் அல்லது உறவுகள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாக இருந்தாலும், இரு மனங்கள் ஒன்றிணைந்து செய்த காதல் திருமணமாக இருந்தாலும், கைப்பிடித்த நாள் முதல் ஆயுளின் இறுதி வரை கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டும். இதை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29-ந் தேதி உலகம் முழுவதும் 'சர்வதேச தம்பதியர் தினம்' கொண்டாடப்படுகிறது.