பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரி வர இருக்கிறார். இந்த நிலையில், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தனிமையில் தியானம் செய்ய இருக்கிறார். இதன் காரணமாக, பூம்புகார் சுற்றுலா படகு குழாம் முழுவதுமாக பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்துவிட்டது. மேலும், குமரி கடல் பகுதியில் கடற்படையினர் பாதுகாப்பு ரோந்திலும் ஈடுப்பட்டு வருகின்றனர்.