சொத்துக்காக சித்தியை வெட்டிக் கொன்ற மகன்

67044பார்த்தது
சொத்துக்காக சித்தியை வெட்டிக் கொன்ற மகன்
ராமநாதபுரம்: தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவரது மனைவி காளீஸ்வரி (60). இவர்களுக்கு தங்கேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், ராஜேந்திரன், மகேஸ்வரி (49) என்ற பெண்ணுடன் கடந்த 29 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்த்து வந்தார். இவர்களுக்கு முத்துலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், ராஜேந்திரன் தனது முதல் மனைவி, மகனுக்கு சொத்து கொடுக்காமல், இரண்டாவது மனைவி, மகளுக்கு சொத்தை எழுதி வைப்பதாகக் கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மகன் தங்கேஸ்வரன், சித்தி மகேஸ்வரியை திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்தார். தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி