தந்தையின் உடலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மகன்

85பார்த்தது
தந்தையின் உடலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மகன்
மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் வேலுச்சாமி (83) கடந்த 2014 ஆம் ஆண்டு உடல்தானம் செய்திருந்தார். அவர் இன்று (மே 29) மரணமடைந்த நிலையில், உடலானது மருத்துவக் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது
ஆனால், மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால், உரிய அனுமதி பெற்ற பிறகே அனாடமி அறைக்கு உடலை கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், அனுமதி கோரி, தந்தையின் உடலுடன் மகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முறையீடு செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி