பாஜகவில் இணைந்ததாக வந்த SMS.. ஷாக்கில் பொதுமக்கள்

78பார்த்தது
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில், அறக்கட்டளை என்ற பெயரில் ஊருக்குள் நுழைந்த கும்பல், அப்பகுதி மக்களிடம் தீபாவளி பரிசு கொடுப்பதாக கூறி செல்போன் எண்களைப் பெற்றுள்ளது. அதன் பின்னர், அவர்கள் கொடுத்த எண்களுக்கு பாஜகவில் இணைந்ததாக SMS வந்துள்ளது. இதனால், அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், “அறக்கட்டளையில் இருந்து வருவதாக சொல்லியதன் பேரில் நம்பர் கொடுத்தோம். இப்படி பண்ணுவாங்கனு எதிர்பாக்கல” என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி