தக்காளி பெட்டியின் விலை கிடுகிடுவென உயர்வு

8272பார்த்தது
தக்காளி பெட்டியின் விலை கிடுகிடுவென உயர்வு
ஒட்டன்சத்திரம் மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி 500 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக உயர்ந்துள்ளது. கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை மிளகாய் 125 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும், கிலோ 37 ரூபாயாக்கு விற்ற முருங்கைக்காய் 45 ரூபாயாகவும், 120 ரூபாய்க்கு விற்ற அவரைக்காய் 200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கோடை மழையின் காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி