பயணியை கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்

49190பார்த்தது
பயணியை கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லாததால் நேற்று இரவு 11 மணியளவில் பயணிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவலர் விஜயகுமார் என்பவர் பயணிகளை அமைதிப்படுத்த மிரட்டல் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆண் பயணி ஒருவர் அமைதியாக இல்லாமல் கத்திக்கொண்டே இருந்தார் எனக்கூறி அவரை கன்னத்தில் அறைந்துள்ளார் காவலர். மேலும் அவர் என்னை யோவ் என கூறினார், போதையில் உள்ளதாகவும் காவலர் அவரை தாக்கியுள்ளார். பின்னர் பேருந்தில் எரிய அவரை தாக்க சென்றபோது பயணிகள் ஒன்று கூடியதால் காவலர் அங்கிருந்து விலகி சென்றார்.

தொடர்புடைய செய்தி