பட்ஜெட்டுடன் புறப்பட்ட நிதியமைச்சர்.! எகிறும் எதிர்பார்ப்பு.!

67பார்த்தது
பட்ஜெட்டுடன் புறப்பட்ட நிதியமைச்சர்.! எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒன்றிய அரசின் 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று (ஜூலை 23) மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை நிதி அமைச்சகத்துக்கு வந்த நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை எடுத்துக் கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு புறப்பட்டார். அங்கு அவரிடம் பட்ஜெட்டை காண்பித்து வாழ்த்து பெறுகிறார். பின்னர், ஒன்றிய அமைச்சரவை பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கும். தொடர்ந்து 11 மணிக்கு மக்களவையில் பட்ஜெட் வாசிக்கப்பட இருக்கிறது.

தொடர்புடைய செய்தி