கள்ளக்காதலியை ஓட ஓட வெட்டிய கள்ளக்காதலன்

52பார்த்தது
கள்ளக்காதலியை ஓட ஓட வெட்டிய கள்ளக்காதலன்
திண்டுக்கல் செம்பட்டி அருகே கள்ளத்தொடர்பை தொடர மறுத்த பெண்ணை, அரிவாளால் வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டையை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் சித்தையன்கோட்டை அருகே உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்த நிலையில், அதே மில்லில் வேலை பார்க்கும் திருமணமான செல்வி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் காதலை தொடர மறுத்த செல்வியை ராஜமாணிக்கம் அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த செல்வி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி