‘பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம்’ - உள்துறை அமைச்சகம்

56பார்த்தது
‘பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம்’ - உள்துறை அமைச்சகம்
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று (மார்ச் 15) தொடங்கியது. ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி