தமிழ்நாட்டில் புதிய மின் கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. மத்திய மின் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படியே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, ஆண்டுதோறும் மின் கட்டணத்தை திருத்த வேண்டும் என்பது மத்திய அரசின் முன் நிபந்தனையாகும். விநியோக முறையை வலுப்படுத்த நிதியை பெற ஆண்டுதோறும் கட்டணத்தை திருத்த நிபந்தனை விதித்ததாலேயே கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.