தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பெண் காயமடைந்தாா்.

2251பார்த்தது
தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பெண் காயமடைந்தாா்.
கும்பகோணம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பெண் காயமடைந்தாா்.

கும்பகோணம் அருகே பந்தநல்லூா் பகுதி கீழ்மாந்தூரில் மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏப். 17 ஆம் தேதி தொடங்கியது. இதில் வெள்ளிக்கிழமை மாலை கோயில் எதிரே அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூக்குழியில், விரதம் இருந்த 1, 600-க்கும் அதிகமான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.

அப்போது சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெண் தடுமாறி பூக்குழியில் விழுந்தாா். இதனால் பலத்த காயமடைந்த அப்பெண்ணை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தொடர்புடைய செய்தி