சீனாவில் சூறாவளி புயல் தாக்குதல்: 5 பேர் பலி

71பார்த்தது
சீனாவில் சூறாவளி புயல் தாக்குதல்: 5 பேர் பலி
சீனாவின் குவாங்சங் நகரை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி உள்ளது. இதனால், கோடிக்கணக்கிலான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூறாவளி புயல், பலத்த வேகத்துடன் காற்று வீசி வருகிறது. அந்த பகுதிகளில் உள்ள கார்கள், வாகனங்கள் காற்றின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன. சூறாவளி தாக்கத்திற்கு 5 பேர் வரை பலியாகி உள்ளனர். 33 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த பகுதியில், மாத இறுதி வரை தொடர்ந்து கனமழை மற்றும் கடுமையான புயல்கள் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்று சீன வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

தொடர்புடைய செய்தி