மார்பிங் செய்து அவதூறு: தேவகவுடா பேரன் காவல்நிலையத்தில் புகார்

84பார்த்தது
மார்பிங் செய்து அவதூறு: தேவகவுடா பேரன் காவல்நிலையத்தில் புகார்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் பல ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இதைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டு பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், நவீன் கவுடா என்பவர்தான் இத்தகைய ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். இந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை. மார்பிங் செய்யப்பட்டவை. வாக்காளர்கள் மத்தியில் பெயரை இழிவுபடுத்தும் நோக்கில் மார்பிங் செய்து ஆபாச வீடியோ பரப்பப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி