காப்பர் கம்பி திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

85பார்த்தது
காப்பர் கம்பி திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
பூதலூர் அருகே பேப்ரிகேஷன் கம்பெனியில் இருந்த காப்பர் வயர்களை திருடி சென்றவர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். பூதலூர் அருகே நவலூரில் ஸ்ரீ கணேசா என்டர்பிரைசஸ் பேப்ரிகேசன் கம்பெனிஇயங்கி வருகின்றது. இந்த கம்பெனியில் உள்ள ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்களை நேற்று முன்தினம் அதிகாலை 3. 15 மணி அளவில் மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கம்பெனியின் பங்குதாரர் திருவரம்பூர் எழில் நகரை சேர்ந்த ராஜா சிதம்பரம் மகன் பத்மநாதன் (52 ) பூதலூர் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் திருடர்களை தேடி வருகின்றார்.

தொடர்புடைய செய்தி