வல்லம் - ஒரத்தநாடு சாலை சீரமைப்பு

85பார்த்தது
வல்லம் - ஒரத்தநாடு சாலை சீரமைப்பு
வல்லம் - ஓரத் தநாடு சாலையில் மின்நகர் அருகே தார்சாலை அமைக்கப்பட்டது.

வல்லத்தில் இருந்து ஒரத்தநாட்டுக்கு செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப் பட்டது. திருக்கானூர்பட்டி நால்ரோட்டில் இருந்து
வல்லம் மின் நகர் வரை சாலை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்தது. ஆனால் சாலையில் மின் நகர் அருகே அதுவும் வளைவில் மட்டும் ஜல்லி கற்களை கொட்டி நிரப்பிய நிலையில் தார்ச்சாலை அமைக்காமல் 2 மாதமாக அப்படியே இருந்தது.

இதனால் இந்த சாலை வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர்
ஜல்லிக் கற்களில் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் சாலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து உடனே தார்ச்சாலை அமைக்கப்பட் டது. நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்
துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி