மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ரூ.54,000-ஐ தாண்டியது

83பார்த்தது
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ரூ.54,000-ஐ தாண்டியது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.360 அதிகரித்து ரூ.54,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.6,755 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ரூ.88-க்கும், 8 கிராம் ரூ.704-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த 3 வாரங்களாக தங்கம் விலை சரமாரியாக அதிகரித்து மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. நேற்று முன்தினம் ரூ.1,000 வரை தங்கம் விலை குறைந்து சற்று ஆறுதல் அளித்த நிலையில், மீண்டும் விலை உயர்வடைந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி