கோயில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது

84பார்த்தது
கோயில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
கோவை கரி வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அர்ச்சகராக இருந்தார். இவர் கோயிலுக்கு சொந்தமான 7 பொன்தாலி, 14 பொன் குண்டுகள், 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை கொண்டு வந்தார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அதை சரிபார்த்த போது அனைத்தும் போலி என தெரியவந்தது. விசாரணையில் நகைகளை திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அறங்காவலர்கள் குழு மற்றும் கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வாத்சாங்கன் கைது செய்யப்பட்டார்.