பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் புரட்சி - பினராயி விஜயன்

68பார்த்தது
பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் புரட்சி - பினராயி விஜயன்
பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் புரட்சி நடைபெறுவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கண்ணூர் வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு கேரளா வரலாறு காணாத வெற்றியை கொடுக்கும். பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் புரட்சி நடக்கும். கேரளாவில் எந்த தொகுதியிலும் பாஜக இரண்டாவதாக வர முடியாது. பாஜகவும், காங்கிரஸும் கேரளாவுக்கு எதிரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றன. அதற்கு எதிராக மக்கள் வலுவான உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி